Thursday, September 24, 2009


நம் ரசித்து வாழ்ந்த வாழ்க்கை கசகின்ற போது..
இனிமையாக பேசிய உடன்பிறப்புகள்,,,
உன்னைவிட்டு பிரியும்போது ....
வேதனைகள் உன் மனதை சோதனையாக்கும்போது......
எல்லோரும் தனிமையில் உன்னைவிட்டு செல்லும் போது,,,,
உனது சுமையை சுகமாக சுமக்க ஒரு உறவு வரும் அதுதான் நட்பு...
உன் வாழ்வின் இறுதி மூச்சி வரை தொடரும் ஒரே உறவு.....

Thursday, August 27, 2009

natpu.........



என் தோழனே,,,,,

உயிரை என்னுல் கலந்திருப்பது
உன் நட்பு மட்டுமே....
உன் அன்பின் மழையில் நனைவதே
ஒரு சுகம்தானே,,,,
நீ காற்று என்றால்
உன் நட்பின் சுவாசமாய் நானிருப்பேன்.....
நீ உலகம் என்றால்....
உன் நட்புக்குள் ஒரு ஜீவனாக நான் வாழ்வேன்...
நீ வெகுதூரத்தில் இருந்தாலும்...
என் எண்ணங்களின் அருகில்தான் இருக்கிறாய் நண்பா....
அலை அலையாய் வரும் நம் நட்பின் அன்பை
யாராலும் அணை போட்டு தடுக்க முடியாது....
நம் உயிர் பிரிந்தாலும்...
நம் நட்பு இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்....


Tuesday, August 18, 2009

காதல்



காதல் வாழ்க்கை இல்லை....
வாழ்க்கையில்தான் காதல்...

காதலை தேடி தேடி
வாழ்கையை தொலைத்துவிடதிர்கள்....

இப்படி யார் அறிவுரை கூறினாலும்....
அன்பே உன்னை நான் மறப்பது
என் உயிரை துறப்பதற்கு சமம்....
உனக்காக நான் எனக்காக நீ
இது இறைவனின் முடிவு....
அதனை யாராலும் மற்ற முடியாது....
நான் வாழும் வாழ்கையில் நீ இல்லை என்றால்....
என் வாழ்வெங்கும் உன் நினைவலைகள்தான்....
மரணம் வந்தால் சந்திப்போம்...
அதுவரை காத்திருப்பேன்....
நீ என்னை தேடி மீண்டும் வரும்வரை....

Wednesday, July 15, 2009

விழிக்கிறேன்...


என் உயிர் காதலனே....
உன் அழகியே பேச்சில் என்னை உன்னிடத்தில் தொலைத்தேன்...
எதோ நடக்கிறது என்னுள்....
நிஜமா அல்ல நிழலா அறியாமல் தவிக்கிறேன் அன்பே....
இது தான் காதலா,,,,???
மனதில் உண்டான கேள்விக்கு பதில் தெரியாமல் விழிக்கிறேன்.....


காதல் அனுபவம்....

பலைவானம் போல இருந்தே என் மனதிலும்
ஒரு அழகியே பூந்தோட்டத்தை உருவகினாய்....
இந்த காதலின் வாழ்கை எனக்கு புதிதாக உள்ளது....
வாழ்கை ஒன்று வந்தால் நான் கண்டிப்பாக உன்னோடுதான் வாழ்வேன்....
என் காதலே என்றும் என்னைவிட்டு பிரியாதே....
வாழ்ந்தால் உன்னோடு வாழ்வேன்....
மரணம் வந்தால் நான் தனிமையில் செல்லுவேன்....

சுகம்....

அன்பே உனக்காக காத்திருப்பதில் ஒரு சுகம்,.....
உன் நினைவுகளில் வாழ்வது ஓர் சுகம்....
உனக்காக ஏங்குவதில் ஓர் சுகம்....
உனக்காக தவிப்பதில் ஓர் சுகம்...
உன் பார்வை படும் அந்த நொடிக்காக
என் ஆயுள்வரை காத்திருப்பது ஒரு சுகம்....

Friday, July 10, 2009

காதலின் கால்தடம்.....

தோழனே உன்னிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும்
ஏனோ தெரியவில்லை இனிகின்றது....
ஆயிரம் சொந்தங்கள் நான் பூமியில் சந்தித்தாலும்
உன்னிடத்தில் ஆயிரம் நெஞ்சங்களை நான் சந்தித்தேன்...
என் நெஞ்சில் நீங்காத உன் உருவத்தை அழிக்க நினைக்கிறன்....
ஆனால்...முடியவில்லை....
உன் உருவம் அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது ....
நீ என் வாழ்வில் வரும் முன் நான் தனிமையில்
இருந்தேன்....
இப்போது உன் நினைவில் இருக்கிறேன்,,,,
தொலைதூரம் நீ இருந்தாலும் எப்போதும் எனதருகே....
இருப்பதாய் உணருகிறேன்...
ஏன் என்னுள் இப்படி ஒரு மாற்றம் என்று
அறியாமல் நானிருந்தேன்
பிறகுதான் உனது காதலின் கால்தடங்களை என் மனதில் பார்த்தேன்...
அன்றுமுதல் நானும் உன்னை காதலிக்க
ஆரம்பித்துவிட்டேன்....

Wednesday, June 17, 2009

எதற்காக வந்தாய்....



உனக்காக தினம் வாசலில்
காத்திருந்தபோது
நீ வரவில்லை.....

கண்மூடி உறங்கும்போது
கனவில் நீ வரவில்லை.....

உன் நினைவால் நான்
கண்ணீர் சிந்தும்போது நீ வரவில்லை....

உன்னை தேடி
தனிமையில் நடக்கும்போது
நீ வரவில்லை....

இப்போது மட்டும் எதற்காக வந்தாய்
என்னுடைய நிம்மதியை
களவாடி செல்லவா...

Tuesday, June 9, 2009

உன்னைவிட....



அன்பே உன்னை அழைக்கிறேன்....
என் காதலை சொல்ல துடிக்கிறேன்....
என் அன்பு உனக்கு
சுகமா இல்லை சுமையா???
அறியாமல் கேட்கிறேன்
சொல் என் ஜீவனே....

பாதை மாறி பயணம் செயதாலும்....
என் காதல் உன்னையேதான்
சுற்றிகொண்டு இருக்கும்...
உன்னை நினைத்து
வாழும் என் மனதில்
வேறு ஒருவரின்
காதலுக்கு இடமில்லை....

இதயம் நின்றாலும் உன் நினைவு மறந்து போகுமா???
உன் நிழல் போல தொடர்வேன்....
நிமிர்ந்து எப்போது என்னை பார்ப்பாய் ....

காதல் முடிவில்லா இன்பம் என்று இருந்தேன்...
இப்போது அளவில்லாத சோகமாகிவிட்டதே .....

Saturday, May 30, 2009

உன்னைவிட....





என் கவிதைகளின் உயிர்மூச்சு நீ....

என் வாழ்கை தோட்டத்தின் காவலாளி நீதான்,,,,

பூக்கள் கூட பொறாமை கொள்ளும் உன் மீது,

ஏனென்றால் அதனை விட உன்னை அதிகம் விரும்புவதால்....


அன்று நீ பார்த்த உன் இருவிழி பார்வை....

இன்றுவரை என்னை உன் மனதில்

ஆயுள்கைதி ஆக்கிவிட்டது


நிலா அழகா? நதி அழகா?

இல்லை நீ அழகா?

கண்களை முடி யோசித்தேன்.....

என் பார்வையில் உன்னைவிட

எதுவுமே அழகாய் தெரியவில்லை,,,,

Wednesday, May 27, 2009

ஞாபக மழை,,,,,,



நீ என் மனதில் கட்டிய காதல்
எனும் தாஜ்மஹால் இன்னும்
அப்படியே தான் உன் நினைவுகளுடன்
இருக்கிறது.....



உன் மௌனத்தின் பாஷையை புரிந்துகொள்ள
பார்கிறேன்...
ஏதும் புரியாமல் தவிக்கிறேன்....



உன் ஒன்றை பார்வை போதும்,,,,
என் காதல் வெண்ணிலா உன்
காலடியில் கிடக்கும் ....



ஆயிரம் கண்கள் கொண்ட
இரவுகூட உறங்கிவிடுகிறது....
ஆனால் நான் மட்டும்...
உன் வருகைக்காக விழித்திருக்கிறேன்...



சீக்கிரம் வந்து உன் ஞாபக மழையை
உன்னிடமே எடுத்து சென்று விடு...

நட்பின் சில வரிகள்....



நட்பின் சில வரிகள்.......

கடல் மண்ணை போனாலும்...
நம் நட்பு ஒரு போதும் மாறாது.....

வாழ்க்கை எனும் தோட்டத்தில்
பூத்து குலுங்கும் மலர்கள்....
நண்பர்கள்,,,,,

சொர்கத்தை சேர தியானம் செய்,,,,
சுவர்க்கம் உன்னை சேர....
உன் நண்பர்களை நேசி.....


Tuesday, May 26, 2009

நட்பு...




சிறுக சிறுக கட்டிய குருவி கூடுபோல நம் நட்பு,,,

அது என்றும் நம் நினைவுகளையே சுமந்து இருக்கும்,,,,,

அதை யாராலும் பிரிக்க முடியாது,,,,

கட்டிய நாம் பிரித்தல்தான் உண்டு,,,,,

அன்பே....


அன்பே நான் தனியாக இருக்கும்....

ஒவ்வொரு வினாடியும்,,,,நீ வரும்

கனவுக்காக ஒவ்வொரு நாள் இரவையும் சுமக்கிறேன்....

உன்னோடு வாழ்வதற்காக மட்டும்....

நட்பு....


மனிதனாய் பிறந்து ஒன்றாய் நட்பில் உருவானோம்.......

மண்ணாய்
போகும்வரை தொடரும் இந்த உறவு ...........

புரிந்துகொள்...அன்பே...


தினமும் நிஜங்களுடன் நிழல்கள்
சண்டை போடுகிறது......

ஏனென்றால் என் நினைவுகளில்தான்
உன்னை உணருகிறேன்...

நீ சூரியனை போல மறைந்ததும்
என் வாழ்வு ஒளி இல்லாமல்
போய்விடுகிறது,,,,

முள் குத்தினால் வலிக்கும் ....
அதுபோல உன் ஞாபகம் என் மனதை
குத்துகிறது .....

எல்லா காதலும் வெற்றி பெறுவதில்லை,,,,
என் காதலும் அதுபோல்
ஆகிவிட வேண்டாம்...

என்னைத்தான் புரிந்துகொள்ளவில்லை,,,
என் காதலையாவது புரிந்துகொள் !!!!

Monday, May 25, 2009

வரம்....

கடவுளிடம் நான் கேட்டேன் ....: கடவுளே நான் என்றும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கே வேண்டும் அதற்க்கு ஓர் வழி சொல்லுங்கள் என்று ... அதற்க்கு கடவுள் சொன்னார் : அட முட்டாளே அன்பே உருவான ... உன் நண்பர்கள் உன்னுடன் இருக்கும் போது நீ ஏன் நிம்மதியே வெளியே தேடி கொண்டு இருக்கிறாய் என்று ....

ஆனந்த கண்ணீர்...








இது உன்னை காணததால் வந்த கண்ணீர் அல்ல.... உன் அன்பை எனக்கு கொடுக்க செய்த கடவுளுக்கு நான் சிந்தும் ஆனந்த கண்ணீர்.......

நட்பின் சின்னம்,,,,


இது வேண்டும் என்றால் சாதரண மலராக இருக்கலாம்
ஆனால் ....
நம் நட்பின் அடையாளமும் இதுதான்......

நட்பு...

மலர்ந்த பூவில் வண்டு இல்லை...
திறந்த வனத்தில் கதவுகள் இல்லை...
.வீசும் காற்றுக்கு முடிவில்லை....
நாம் கொண்ட நட்புக்கும் என்றும் பிரிவில்லை.....

நட்பு....


நாம் மீது உண்மையான அன்பும் அக்கரையும் வைத்திருக்கும் ஒருவரை கண்டு பிடிப்பது கடினம்.....
ஆனால்..................
எனக்கு அந்த கவலையே இல்லை......
ஏன் என்றால் நீதான் ஏன் நண்பனாக இருக்கிறாயே.......

நட்பு....


நட்பு என்பது மலரல்ல ....
வடுவதற்குஅது ஆலமரம் போல ...
100 ஆண்டுகள் மேலகியும் வாழ்ந்து கொண்டு இருக்கும் .......



நண்பர்கள்,,,,


அன்பு நிறைந்த உலகில் அப்பா அம்மாவை பார்தேன் ,,,, சந்தோஷம் நிறைந்த உலகில் உடன் பிறந்தவர்களை பார்த்தேன் .,,,, காதல் நிறைந்த உலகில் காதலர்களை பார்த்தேன் ,,, ஆனால் .... நட்பு நிறைந்த உலகத்தில் என் நண்பர்களைதான் பார்த்தேன் ,,

நட்பு...


நட்பு ....
நிறம் பார்த்து வருவதில்லை ......
வசதி பார்த்து வருவதில்லை ...
பணம் பார்த்து வருவதில்லை ,,,,
அது அழகிய மனதை பர்த்து வருகிறது...
அதைஉன்னிடத்தில் கண்டேன் நண்பனே .....
இன்று போல் என்றும் தொடரே வேண்டும் நம் நட்பு ,,,,,,,,,

நட்பு...


எங்கோ பிறந்து ,...
எங்கோ வளர்ந்து ,...
ஒருநாள் ஒருவரை ஒருவர்
இந்த நட்பு கோட்டையில் சந்தித்து கொண்டோம் ....
அப்போது புரியவில்லை நம் உறவு
இன்று வரை தொடரும் என்று ...
நமக்குள் கொஞ்சம் கோபங்கள் ,
சில சண்டைகள் ...
சின்னதாய் ஒரு 'thanks' ....
பெரிசா ஒரு 'sory'...
சிலநேர பிரிவு...
வெகுநேர சந்திப்பு ...
இதுவே நம் உண்மை நட்பின் அர்த்தம் ...
என்றும் பிரியகூடாது நம் நட்பின் அன்பு ....

நட்பு...


திர்பார்த்து வந்த காதல்
என்றும் வாழ்வில் நிலைத்ததில்லை ....
எதிர்பாராமல் வரும் நட்பு
என்றும் வாழ்வில் பிரிந்ததும் இல்லை ......

வாழ்க்கை...



வாழ்கை என்பது ஒரு புத்தகத்தை போன்றது....
ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு அனுபவங்கள்.....
பல சந்தோஷங்கள் சில சோகங்கள்...
ஆனால் இன்றைய நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள்......

நட்பின் அர்த்தம்,,,



பேசும் வார்த்தைகளை விட பேசாத மௌனதிற்குதன்
அர்த்தம் அதிகம் ......
அதேபோல்...
நாம் பேசியது மௌனமொழியாக இருந்தாலும்
அதில் கலந்திருக்கும் நம் நட்பின் அன்பு
நமக்கு மட்டும்தான் தெரியும் ....

தோழியாக.....


உன் தாய் உன்னை பத்து மாதம் கருவறையில் சுமந்தாள் ....
நான் உன்னை என் ஆயுள்வரை மனதில் சுமப்பேன்
ஒரு தோழியாக ....

அம்மா....

அம்மா அவள் அருகில் உறங்கும்போது
அன்போடு அனைத்துக் கொள்வாள்.....
சிலநாள் அவள் நமக்கு தோழியாக இருபாள்....
பல நல்ல நமக்கு ஆசானாக இருபாள்....
அவள் என்னை விட்டு பிரிவாள்
என்று எனக்கு என்ன தெரியும் ....

தெரிந்திருந்தால் அவள் அணைபிலிர்ந்து
நான் பிரிந்து இருக்க மாட்டேன்....
ஆனால்
இன்னமும் அவளின் முச்சி காற்றுதன்

என்னை உறங்க வைக்கிறது ......
ஆனால் அவள் உடல் மட்டும்
உயிர் இன்றி போய்விட்டதே.....


நட்பு...

இதயம் வலிக்கும்போது
கண்கள் கலங்கினால் அது ...காதல் ...
கண்கள் கலங்கும்போது இதயம் வலித்தல்
அது .....நட்பு ....

நட்பு...


காதல் என்பது வானவில் போல அழகாக இருக்கும்
ஆனா
ல் நிலையானது அல்ல .......
ஆனால் நட்பு என்பது வானத்தை போல அழகில்லாமல் இருக்கும்
ஆனால் நிலையானது ......
அதுதான் நட்பு ............

நட்பு ...



எனக்குள் இருக்கும் நீயும்
உனக்குள் இருக்கும் நானும்
நமக்குள் இருக்கும் நட்போடு
பேசிகொள்வோம் மௌன மொழியில் .....

நட்பு....


நட்பு என்பது ஆழ் கடலில் இருக்கும் அறிய முத்து ... அந்த முத்தை கடவுள் நமக்கு பரிசாக கொடுத்துள்ளார் .. அதனை கண்டிப்பாக நம் உயிர் உள்ள வரை பாதுகாப்போம்...

நண்பா....


நண்பா,,,,,
உனக்காக அழகான கவிதை எழுதலாம் என்று நினைத்தேன்....
பின் வேண்டம் என்று விட்டுவிட்டேன்,,,,,,
என் என்றால் உன்னை விடவா என் கவிதை அழகாக இருக்க போகிறது என்று..............

இதயம்...


கடவுளே எங்களை தன் காணமுடியாமல் செய்துவிட்டாய்....
எங்கள் இதயங்களையாவது ஒன்றாக இருக்கவிடு......


அம்மா....


அம்மா ......
நம் உயிருளும் உணர்விலும் இருப்பவள்.
அம்மா........
நமக்கு உருவம் கொடுத்தவள்...
அம்மா...
நமக்கு வலித்தல் அவள் கண் கலங்கும்....
அம்மா...
நம் சிரித்தால் அவள் மனம் மகிழ்வாள்.....
அம்மா.....
அன்பின் மறு உருவம்....
கடவுளின் விலை மதிக்க முடியாத படைப்பு அம்மா.....

நட்பு....


நான் உன்னிடம் பேசியதை விட
நீ எனக்காக பேசியதில்தான்
உணர்தேன் நமக்கான நட்பை......


இதயம்...


என் உயிரை கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன்..
நீ என் இதயத்தை அல்லவா கேட்டுவிட்டாய்....
அதை நான் எப்படி தருவது ...
என் இதயமாக இருந்தாலும் ...
அதில் வாழ்வது என் நண்பன் ஆயிற்றே .....

கண்ணீர்....


தினமும் இரவு நட்சத்திரங்களை எண்ணி கொண்டு ....
உறங்காமல் காத்துக்கொண்டு இருக்கிறேன்.....
உன் வருகைக்காக கண்ணிரோடு ......


கண்ணீர்

நட்பின் பிரிவு...


வசந்தத்தின் வானில் சிறகடித்து பறந்தோம்.....
வானவில் போல அழகாக இருந்தோம்.....
விடைபெரும் நேரம் வரவே.....
வேதனையுடன் பிரிந்தோம் .....
அன்று......
பசுமையாக இருந்த நம் மனம்......
இன்று.....
பிரிவு என்ற விதை விழுந்து
இப்படி பட்டமரம் ஆகிவிட்டதே.....

நட்பு...


நாட்கள் மாறினாலும் நம் நட்பு மாறாது..... வானத்துக்கு பூமி எல்லை என்றாள் நம் அன்புக்கு நம் மனம்தான் எல்லை.....
பூத்து குலுங்கும் பூக்களின் அழகை
நம் நட்பு அழகானது.....
அதனால்தான் பூக்களுக்கு நம் மீது கொஞ்சம் பொறாமை......
வானத்தில் மேகக்கூட்டங்கள் இருந்தாலும் அது மறப்பதில்லை....
அதனால்தான் எப்பொழுதும் மழையாக பொழிகிறது.....
அதேபோல்தான் நான் எங்கு இருந்தாலும்....
உன்னை நினைப்பதை மறப்பதில்லை....
உன்னுடன் நட்பில் மயங்கிய என் மனம் மௌனமாகிறது மற்றவர்களின் நட்பை
ஏற்கும்போது......