Wednesday, June 17, 2009

எதற்காக வந்தாய்....



உனக்காக தினம் வாசலில்
காத்திருந்தபோது
நீ வரவில்லை.....

கண்மூடி உறங்கும்போது
கனவில் நீ வரவில்லை.....

உன் நினைவால் நான்
கண்ணீர் சிந்தும்போது நீ வரவில்லை....

உன்னை தேடி
தனிமையில் நடக்கும்போது
நீ வரவில்லை....

இப்போது மட்டும் எதற்காக வந்தாய்
என்னுடைய நிம்மதியை
களவாடி செல்லவா...